விமானத்தில் பயணம் செய்யும் போது மது அருந்துவது இதயத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி நீண்ட விமானப் பயணத்தின் போது மது அருந்துவதும், பிறகு குட்டித் தூக்கம் போடுவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தில் காற்றழுத்தம் குறைகிறது மற்றும் அத்தகைய நிலையில் மது அருந்திவிட்டு தூங்குவது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இது இதயத் துடிப்பை அதிகரிக்க செய்கிறது.