திருமணமாகி 18 மாதங்களே ஆன நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். இதையடுத்து, விவகாரத்திற்கான காரணத்தைக் கேட்ட நீதிபதி அந்த பெண் சொல்லிய பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கணவர் தன்னை மிகவும் விரும்புவதாகவும், தன்னுடன் சண்டை சச்சரவு இல்லை என்று கூறிய அந்த பெண் தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதி விவாகரத்து மனுவை நிராகரித்தார். இந்நிலையில், இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.