தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவது தற்போது வாடிக்கையாகி உள்ளது. அதுபோலத்தான் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒருவர் சாலை ஓரம் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பைக்கில் வந்த இவர் இருவர், மெதுவாக அவர் பின்னால் வந்து போனை பறித்துக் கொண்டு ஓடுகின்றனர். அவர்களை துரத்தி பிடிக்க சென்ற அந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.