சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. பலர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இன்று(ஜூன் 13) கூட ‘தெகிடி’, ‘மேயாத மான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் விஜயன் வீட்டில் இரண்டு நாட்களாக இறந்து கிடந்திருக்கிறார். 45 வயதாகும் அவர், மாரடைப்பு ஏற்பட்டு கழிவறையில் விழுந்து தலையில் அடிபட்டு இழந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தனியாக வசிப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை பிரதீப் விஜயன் உணர்த்திவிட்டு சென்றுள்ளார்.