24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், நீட் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க மத்திய அரசு தயாராக. நீட் தேர்வு பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட்டு கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 23ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும், அதன் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.