நாய் கடித்து காலில் தையல் - மாநகராட்சியில் புகார்

66பார்த்தது
நாய் கடித்து காலில் தையல் - மாநகராட்சியில் புகார்
சென்னை மதுரவாயலில் வசித்து வரும் ரமேஷ் குமார் என்பவரது காலை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதனால், காயமடைந்த அவருக்கு காலில் 2 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி, நாயின் உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியிலும் புகார் அளித்த நிலையில், இன்று(மே 15) காலை மாநகராட்சி அதிகாரிகள் அந்து நாயை பிடித்துச் சென்றனர். தொடர்ந்து, போலீசார் நாயின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி