திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பசுமையான மலைப்பகுதியில் மலை பூவரசம் பூக்கள் தற்போது பூக்கத்துவங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் பசுமையாக மட்டும் காணப்படும் காட்டு பூவரசம் மரத்தில் சமீப நாட்களாக காட்டுப்பூவரசம்
பூக்கள் கொத்துக்கொத்தாக பூக்க துவங்கியுள்ளன.
குறிப்பாக அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைச்சாலை ஒரங்கள்,
பூங்காக்கள், வட்டக்கானல் டால்பின் பாறை, புலிச்சோலை உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் அதிகம் உள்ள மரங்களில் இந்த சிகப்பு வண்ண மலர்கள் அதிகளவில் பூத்து
குலுங்கியுள்ளது.
கொடைக்கானலின் இயற்கை அழகினை காண வரும் சுற்றுலா பயணிகளை இந்த அழகிய மலை பூவரசம் பூக்ககளை கண்டு ரசிதும் வருகின்றனர்.