திண்டுக்கல்: பூத் ஸ்லிப் வழங்குவதாக கூறி பண பட்டுவாடா

4665பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திலகபாமா காலை 7 மணி முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலை 10 மணிக்கு திண்டுக்கல் பழனி சாலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எம் எஸ் பி பள்ளி எதிரே திமுக வார்டு கவுன்சிலர் சேகர் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் மற்றும் பண பட்டுவாடா செய்வதாக தகவல் வந்ததை அடுத்து புதன்கிழமை மதியம் 12 மணியளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று திமுக வார்டு கவுன்சிலர் சேகரிடம் எதற்காக நீங்கள் பூத் ஸ்லிப் வழங்குகிறீர்களா, பணப்பட்டு வாடா செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்பாளர் தலைவர் திலகபாமா தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி முழுவதும் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும் அதற்கு உடந்தையாக திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பணப்பட்டுவாடு விழாவில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேட்பாளர் திலகபாமா கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி