தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

1585பார்த்தது
திண்டுக்கல் சிறுமலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் முத்துலட்சுமி என்ற மகளும் முத்துராம் என்ற மகனும் உள்ளனர். செல்லப்பாண்டி நீரழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சேதுராஜ், பொன்னுத்துரை, சிவ பரதேசி, முருகன் ஆகியோருடன் சேர்ந்து காரில் திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர் புறம் அருகில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.

அங்கு செல்லப்பாண்டி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அதே காரில் சனிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கென்னடி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி