ஊராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

75பார்த்தது
ஊராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திண்டுக்கல் அருகே ஏர்போர்ட் நகரில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதற்கு பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் தலைமை தாங்கி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், ஆப்பிள் ஆரஞ்சு, வாழைப்பழம், அண்ணாச்சி பழம், தர்பூசணி, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டன. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலாமணி, செந்தில்குமார், சுப்புலட்சுமி, ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி