தேர்தலில் போட்டியிட மொத்தம் 26 பேர் வேட்புமனு தாக்கல்

64பார்த்தது
தேர்தலில் போட்டியிட மொத்தம் 26 பேர் வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதான கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 26 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரா. சச்சிதானந்தம், அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ சாா்பில் விஎம்எஸ். முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக சாா்பில் ம. திலகபாமா, நாம் தமிழா் கட்சி சாா்பில் கயிலை ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் எஸ். நாச்சிமுத்து ஆகியோா் பிரதான வேட்பாளா்களாக மனு தாக்கல் செய்தனா்.

மேலும், பிரதான வேட்பாளா்களுக்கு மாற்று வேட்பாளா்கள் 4 போ, சுயேச்சையாக போட்டியிட தினேஷ்குமாா், ஆா். ஆறுமுகம், சபரிநாத், நாகஜோதி, வெங்கடேசன், அங்குசாமி, செல்வகுமாா், ராஜ்குமாா், ஆறுமுகம், சதீஷ் கண்ணன், அன்புரோஸ், ஆலப்பன், விஷ்ணு என்ற முருகேசன், செல்வம், பழனிசாமி, சுரேஷ், இளையகுமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். பிரதான வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை என மொத்தம் 26 பேர் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி