பெற்ற தாயை கொலை செய்யும் மகன் (வீடியோ)

2942பார்த்தது
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அங்கு நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து வயதான தாயை கடுமையாக தாக்கியுள்ளார். பெற்ற தாய் என்றும் பாராமல் மூச்சை பிடித்து கழுத்தை நெரித்து மகன் தாயை கொலை செய்துள்ளான். அடி தாங்க முடியாமல் அந்த வயதான பெண்மணி விட்டுவிடு என்று கெஞ்சியும் கேட்காமல் மூச்சை பிடித்து கொலை செய்வதிலேயே மும்மரமாக இருந்தான். மேலும் அந்த நபரின் மனைவி கையில் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு கையிலும் வயிற்றிலும் அடித்து சித்திரவதை செய்தனர். வயதான தாயை சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி