நீண்டகால அலர்ஜி மற்றும் ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக வரும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது. ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு(The Global Initiative for Asthma - GINA) 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் முதல் கூட்டல் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.