முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

57பார்த்தது
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு சி ஐ டி யு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மாலை 4. 30 மணி அளவில் டாஸ்மாக் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் நிறுவனங்களில் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பணி நிரந்தரம் செய்து உத்தரவிடக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் கோபால் நன்றி உரை வழங்கினார் மேலும் முன்னணி நிர்வாகிகள் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி