

தர்மபுரி: இளம்பெண் தற்கொலை; காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட டாடா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் ரம்யா. இவருக்கு வயது (19). இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சேலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதிகாமான்கோட்டை காவலர்களுக்கு உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாமான்கோட்டை காவலர்கள், ரம்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்த காரணம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.