தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்யேகமாக வார சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று ஏப்ரல் 04 காலை கூடிய வாரச்சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர் ஆடுகள் தரம் மற்றும் அளவைப் பொறுத்து 5000 ரூபாய் முதல் 9, 300 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் 25 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.