தர்மபுரி: திமுக. சார்பில் முஸ்லிம்களுக்கு அரிசி தொகுப்பு

75பார்த்தது
தர்மபுரி மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரிசி தொகுப்பு வழங்கும் விழா நேற்று மாலை கடத்தூரில் நடந்தது. கடத்தூர் பேரூராட்சி செயலாளர் மோகன் தலைமை தாங்கி னார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அ. சத்தியமூர்த்தி, கடத்தூர் பேரூராட்சி தலைவர் கு. மணி, மேற்கு ஒன்றிய தி. மு. க. செய லாளர் ஆர். சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தர்மபுரிமேற்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு ரமலான் /பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு அரிசி தொகுப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து ஒடசல்பட்டி கூட்டுரோடு, கிருஷ்ணாபுரம் சிந்தல்பாடி, தாளநத்தம், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அரிசி தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி