தர்மபுரி: அங்காடியில் 20. 60 லட்சத்திற்கு பட்டுகூடுகள் விற்பனை

55பார்த்தது
தர்மபுரி 4 ரோடு பகுதியில் தமிழக பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் திருப்பத்தூர் முன்னிட்டு வெளி மாவட்டங்களிலும் விவசாயிகள் மேம்பட்டு கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். நேற்று மார்ச் 29 பல்வேறு பகுதிகளில் இருந்து  விவசாயிகள் 4, 014 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 607 ரூபாய்க்கும், சராசரியாக  கிலோ 505 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 352 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் நேற்று 20, 60, 391 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி