தர்மபுரி மாவட்டத்தில் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது இந்த நிலையில் மாவட்டத்தில் பென்னாகரம் பாப்பாரப்பட்டி அரூர், மொரப்பூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர்களுக்கு மேல் முள்ளங்கி சாகுபடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்ப ஆண்டு பருவமழை மற்றும் சீதோஷ்ண நிலை காரணத்தால் முள்ளங்கி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது தற்போது ஒரு கிலோ முள்ளங்கி கிலோ 14 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை ஆகிறது மேலும் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஒரு ஏக்கரில் 15 டன் முள்ளங்கி விளைச்சல் நடைபெறும் நிலையில் நடப்ப ஆண்டு ஒரு ஏக்கருக்கு 25 டன் விளைச்சல் நடைபெற்று வருவதாக மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.