தர்மபுரி: பொறுப்பு அமைச்சர் வேண்டாம் திமுகவினர் பேட்டி

70பார்த்தது
தருமபுரி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளராக துரைசாமியிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் ஆய்வாளர், அமைச்சர் குறித்தும் தேவானந்தம் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென இன்று துரைசாமி உள்ளிட்ட மேலும் சிலரை தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். இன்று காலை விசாரணைக்கு வந்த துரைசாமி மற்றும் அவர் ஆதரவாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்ட பொறுப்பாளராக பதவி ஏற்றதிலிருந்து கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களால் கட்சி வளர்ச்சி அடையாமல் உள்ளது.

மேலும் நிழல் அமைச்சராகவும் நிழல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வரும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் தேவானந்தத்தையும் தருமபுரி மாவட்டத்திற்கு வரவேண்டாம் என உண்மையான திமுக தொண்டர்கள் ஏராளமானோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம் இந்நிலையில் கட்சி தொடர்பான பிரச்சனையை நீங்கள் எங்கள் கட்சி நிர்வாகம் விசாரிக்க வேண்டும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறை மூலம் எங்களை மிரட்டுகின்றனர். கட்சிப் பிரச்சினையை காவல்துறை வரை கொண்டு சென்றுள்ளனர். தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரையும் அவரது நேர்முக உதவியாளர் தேவானந்தத்தையும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி