வாரச்சந்தையில் 90 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

64பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இதனையில் நேற்று நடைபெற்ற வார சந்ததியில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர் இந்நிலையில் நேற்று 450-க்கும் மேற்பட்ட பல்வேறு சேர்ந்த மாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் மாடுகள் 47 லட்சத்திற்கும் விற்பனையானது மேலும் ஆடுகள் 40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் 3 லட்சத்திற்கு விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் 90 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி