"5 பேர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை தேவை" - திருமாவளவன்

85பார்த்தது
"5 பேர் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை தேவை" - திருமாவளவன்
சென்னை மெரினாவில் நேற்று (அக்.6) நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை. நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா? என விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி