ஆடு திருட முயன்ற வாலிபர் கைது

68பார்த்தது
அரூர் அருகே உள்ள மாவேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம் (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வடுகப்பட்டி ஏரிக்கரை அருகே ஆடுகளை மேய்த்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்த 2 வாலிபர்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்றை பிடித்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தெய்வம் அந்த ஓடி வந்தார். அவர்கள் தெய்வத்தை கீழே தள்ளிவிட்டு ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக தெய்வம் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சோரியம்பட்டியைச் சேர்ந்த நிர்மல் ராஜ் (26), அஜய் குமார் (22) ஆகியோர் ஆட்டை திருட முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அஜய் குமாரை கைது செய்து தலைமறைவாக உள்ள நிர்மல் ராஜை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி