மாமியாரை கூலிப்படையை ஏவி கொன்ற மருமகள்

17867பார்த்தது
மாமியாரை கூலிப்படையை ஏவி கொன்ற மருமகள்
2017ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (60) என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை தனது மருமகள் சத்யாவால் கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டார். இதுகுறித்து நடந்த விசாரணையில் மாமியாருடனான தகராறில் சத்யா, தனது அண்ணனின் உதவியுடன் இதனை செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சத்யா அவரது அண்ணன் பிரபு உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குக்கு நேற்று (மே 20) தீர்ப்பு வெளியானது. அதன்படி பிரபு உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சத்யாவிற்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கே.சுஜாதா தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி