கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீபாலாஜி மேல்நிலை பள்ளியில் நிர்வாகி அன்புக்குமரன் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.