சிதறி கிடக்கும் கற்களால் வாகன ஓட்டிகள் அவதி

81பார்த்தது
கடலூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள செம்மண்டலம் - நெல்லிக்குப்பம் முக்கிய சாலையின் நடுவில் கருங்கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் அவ்வழியாக சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு சிலர் கற்கள் மீது ஏறி கீழே விழுந்தும் செல்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி