கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் சின்ன கடைவீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு இருளமுகம் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் குடல் பிடிங்கி மாலை சுடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.