திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே முதியவர் ஒருவரை மூன்று திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கேட்டு கொடுக்காததால் முதியவரின் சட்டையை கிழித்து அவரது நெஞ்சில் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். பொதுமக்கள் பலரும் இதை தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். வள்ளியூர் வட்டார பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் திருநங்கைகளின் இந்த செயல்களால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.