கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சீரடி சாய்பாபா ஆலயத்தில் வைகாசி மாதம் வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.