காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

55பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 22,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதில், காவிரியில் இருந்து 20,652 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயப் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தண்ணீர் வரத்துக் காரணமாக விவசாயத்தில் அதிக லாபம் பெற முடியும் என அப்பகுதி விவசாயிகள் மகிச்சியாக தெரிவிக்கின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி