மனைவியை அடித்துக் கொன்ற கணவன் சிறையில் அடைப்பு

85பார்த்தது
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் சிறையில் அடைப்பு
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10ஆம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆர்த்தியின் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில், குடும்பத்தகராறில் ஆர்த்தியை கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி