புவனகிரி மதுபாட்டில்கள் விற்ற மூதாட்டி கைது

80பார்த்தது
புவனகிரி மதுபாட்டில்கள் விற்ற மூதாட்டி கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சொக்கன் கொள்ளை கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக புவனகிரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் காவல் துறையினர் சொக்கன் கொள்ளை கிராமத்தில் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி