திருப்பூர், உடுமலை அருகே நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி இரவு அந்த சாலையில் சிலர் காரில் சென்றனர். சாலையில் ஏதோ உயிரினம் ஊர்ந்து செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். உற்றுப் பார்த்தபோது அது சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது. வாகனத்தின் வெளிச்சத்தைப் பார்த்த முதலை சாவகாசமாக சாலையில் நடந்து மறுபக்கம் சென்றது. இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் தற்போது வைரலாகி வருகிறது.