மீண்டும் 21 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

81பார்த்தது
மீண்டும் 21 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி