கோவை: போராட்டத்தை ஒத்திவைத்த பல்கலை மாணவர்கள்!

76பார்த்தது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
துணைவேந்தர் இல்லாததே இதற்கு காரணம் எனவும், துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 20 முதல் 30 நாட்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதற்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்ததால், மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி