கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்துவைத்தார் முதலமைச்சர்

59பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்துவைத்தார் முதலமைச்சர்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி