சென்னை: கோடை வெயில்: பறவைகளுக்கு உணவு அளியுங்கள்: முதல்வர்

57பார்த்தது
சென்னை: கோடை வெயில்: பறவைகளுக்கு உணவு அளியுங்கள்: முதல்வர்
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 30) மட்டும் 6 இடங்களில் வெயில் சதமடித்தது. வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு மக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பறவைகளுக்கு இந்த கோடைகாலத்தில் உணவு, நீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், "கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி