விருகம்பாக்கம் - Virugampakkam

உடல் வலி மாத்திரைகள் வைத்திருந்த 9 பேர் கைது

உடல் வலி மாத்திரைகள் வைத்திருந்த 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கோயம்பேட்டில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் ஞானபாண்டிஸ்வரன் (23), தீனதயாளன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டி ரயில் நிலையம் முன்பு நடந்த சோதனையில் கேரளாவை சேர்ந்த சக்காரியா பண்டரதில் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் எம். ஜி. ஆர் நகரை சேர்ந்த கிஷோர்குமார் (22), சந்தோஷ் (19), விக்னேஷ் (எ) வெள்ளை விக்கி (24), ராஜபாண்டி (23), அபிஷேக் (20), சதீஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா, 80 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகளில், 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 19. 3 கிலோ கஞ்சா, 80 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீடியோஸ்


சென்னை