கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையைச் சேர்ந்தவர் கார்த்தி (33). இவரது மனைவி வினோபா (32). இவர்கள், மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி வைத்து நடத்தி வந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தம்பதியின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.