திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்.7-ம் தேதி நடைபெறகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும், மேலும் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 8-ம் தேதிக்கும் ஒத்திவைக்கடுவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.