கூட்ட நெரிசலில் பலி என கதை கட்ட இபிஎஸ் முயற்சி: சிவசங்கர்

60பார்த்தது
விமான சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவாரா? என்பதை முதலில் அறிவிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக புதிதாக கதை கட்ட முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது, விமான சாகச நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உயிரிழப்பிற்காகவும் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் சிந்தியுள்ளார். விமான சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவாரா? என்பதை முதலில் அறிவிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக புதிதாக கதை கட்ட முயல்கிறார். தூத்துக்குடியில் உயிர்களை துடிக்க துடிக்க சுட்டுக்கொன்ற அரசு எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அரசு. அதையெல்லாம் மறைத்து தற்போது மக்கள் மீது அபிமானம் கொண்டவராக இந்த போராட்டங்களை நடத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி