ஆயிரம் விளக்கு - Thousand lights

ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து

ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய கவுரிதனயன், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மகனை கவனிக்க வேண்டும் எனக் கூறி, தெற்கு ரயில்வேக்கு இடமாற்றம் கோரியுள்ளார். அதன்படி இடமாற்றம் வழங்கப்பட்ட கவுரிதனயன் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அரக்கோணத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை இடமாற்றம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. மகனை கவனித்துக்கொள்வதற்காக ஓய்வு பெறும் வரை அரக்கோணத்திலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கவுரிதனயன் சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பணியாளர் நலத்துறை அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது எனக் கூறி மனுதாரரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
மெட்ரோ ரயில் திட்டம்: இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் தீவிரம்
May 20, 2024, 14:05 IST/மைலாப்பூர்
மைலாப்பூர்

மெட்ரோ ரயில் திட்டம்: இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் தீவிரம்

May 20, 2024, 14:05 IST
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 5வது மற்றும் 4வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3. 75 கி. மீ. தொலைவுக்கு இணைக்கும் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116. 1 கி. மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 45க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாதவரம்-சோழிங்கநல்லூர் (5வது வழித்தடம்), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (4வது வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பால பாதைகள் அமையவுள்ளன. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையை சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 340 தூண்களில் இதுவரை 156 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலத்தை தாங்கும் தூண்கள் அதாவது தூண்களில் தொப்பி வடிவிலான கட்டுமானம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தூண்கள் மீது இரும்பு பாலத்தை எடுத்து வைக்கும் பணியும் நடைபெறுகிறது.