தமிழக ஆளுநர் ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ல் முடிய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீடிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பதவிக்காலம் நீடிக்கப்பட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தருக்கு ஆதரவளிக்கும் அவருக்கு பதவியை நீட்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.