
சென்னை: உதவி தொகை மோசடி: பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற குறிப்பிட்ட சில மாணவ மாணவிரின் பெற்றோரின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும் சிலர் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகவும், வங்கிக் கணக்கு மற்றும் ஓடிபி உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்கின்றனர். இதனால் மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. அதனால் போன்பே, ஜிபேயில் உதவித் தொகை அனுப்புவோம் என்று கூறும் செல்போன் அழைப்புகள் மோசடியானவை. அவற்றை மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் நம்ப வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.