பெரம்பூர் - Perambur

போதை மாத்திரை விற்பனை: இருவர் கைது

போதை மாத்திரை விற்பனை: இருவர் கைது

புளியந்தோப்பு, பி. எஸ். மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அஜித்(20). பெற்றோர் இல்லாத நிலையில், அண்ணன் பராமரிப்பில் உள்ள இவர், நேற்று முன்தினம்(செப்.10) அதிகாலை 2: 00 மணியளவில், தனக்குத்தானே போதை ஊசி போட்டுக் கொண்டு, போதை தலைக்கேறி படுத்துள்ளார். மயக்க நிலையில் கிடந்த அவரை, அவரது அண்ணன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். விசாரணையில், மது போதை ஏறாததால், மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் தனக்குத்தானே கையில் போட்டுக் கொண்டது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், போதை தெளிந்ததும், போதை மாத்திரை பயன்படுத்தியதற்காக அஜித்(20), மற்றும் விற்பனை செய்த மணிகண்டன்(23) ஆகியோரை கைது செய்தனர்.

வீடியோஸ்


சென்னை