கனமழை எதிரொலி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

74பார்த்தது
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மாலை இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க விருந்த ஒன்பது விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதே போல சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்த 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.

சூறைக்காற்றின் காரணமாக வானில் விமானங்கள் வட்டமடித்த போது பயணிகள் சற்று அச்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி