
சென்னை நகரத்தில் கண்காணிப்பு அதிகரிப்பு: காவல் ஆணையர்
சென்னை பெருநகரில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார். போர் பதற்ற சூழல் காரணமாக சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.