மின் கட்டணம் உயர்வு - ஆர்ப்பாட்டத்தில் டிடிவி பங்கேற்பு

85பார்த்தது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின்சார கட்டணம் உயர்வு குறித்து கண்டன உரையாற்றினார். மேலும் மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்தி மக்கள் மீது சுமைகளை திமுக அரசு ஏற்றுகிறது என கூறி அனைவரும் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி