திடீரென வந்த அமைச்சர்... கண் கலங்கிய பள்ளி தலைமை ஆசிரியர்

79பார்த்தது
தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திடீரென வந்த அமைச்சரைக் கண்டதும், பள்ளி தலைமை ஆசிரியர் கண் கலங்கினார். உடனே அவரை ஆசுவாசப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களிடம் கலகலப்பாக பேசிச் சென்றார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி