எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

74பார்த்தது
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாமகவை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பிறகு, இந்த மிரட்டல் கடிதம் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் அதிகாரிக்கு இன்று மதியம் தபால் மூலமாக ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்த பார்த்த நிலைய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். அதில், மதுராந்தகம் தாலுகா புக்கத்துறை கிராமம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் இருந்து இந்தக் கடிதம் வந்திருந்தது. அதில், பாமகவை தரக்குறைவாக பேசிவரும் திமுக அரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடமாக கருதி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி